உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இலங்கை – போட்டி நிகழ்ச்சிகள் 3 நாடுகளில்

cricket_.jpgஇலங்கை,  இந்தியா,  பங்ளாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில்  2011-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை “ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. ஏ,  பீ, என இரு பிரிவுகளிலும்; தலா 7 அணிகள் இடம் பெறுகின்றன.

ஜொஹனஸ்பர்கில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் வௌ;வேறு பிரிவுகளிலும்,  அவுஸ்திரேலியா,  தென்னாபிரிக்கா ஆகியவை வேறு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி “ஏ’ பிரிவில் இலங்கை,  அவுஸ்திரேலியா,  பாகிஸ்தான், நியூஸிலாந்து, சிம்பாப்வே,  கனடா,  கென்யா அணிகள் இடம்பெறுகின்றன. “பி’ பிரிவில் இந்தியா,  தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்ளாதேஷ்; அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் அடங்குகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *