வவுனியா வில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் பருவமழை தொடங்கினால் பாரிய அவலங்களைச் சந்திப்பார்கள். எனவே அகதிகளை இனியும் தாமதிக்காமல் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கை விவகாரம் குறித்து ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோதே அவர் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில் அகதிமுகாம்களில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டும்போதாது. மழைக்காலத்துக்கு முன்பாக பெரும்பாலான அகதிகள் அவர்களின் சொந்த இடங்களில் சென்று மீள்குடியேற இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
இந்த அகதிகள் மழைக்காலத்திற்கு முன்பாக அவர்களின் சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அல்லது அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். அல்லது இந்த அகதிகளை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கவேண்டும். அப்போதுதான் அகதிகள் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும். மழைகாலத்தில் அகதிமுகாம்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அகதிகள் பாதிக்கப்பட்டு தொற்றுநோய்களுக்கு ஆளாகிவிடுவார்கள். குறிப்பாக மெனிக்பாம் மக்கள் கடந்த காலங்களில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
Appuhamy
There is no security for tamils,IDP knows better than others, if they wanted go home please allow them.please do not fool UN,USA,EU,the war is over goverment is very communal last 50 years.this government will remain maximam 6 years.