இராணுவ கண்காட்சி 11ம் திகதி வரை நீடிப்பு

011009army_exhibition1.jpgகொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இராணுவக் கண்காட்சி எதிர்வரும் 11 ஆந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக நாளாந்தம் இலட்சக் கணக்கான மக்கள் வருகை தருவதால் அதனை நீடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த மூன்றாந் திகதி ஆரம்பமான இந்தக் கண்காட்சியை ஏழாம் திகதி வரை நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *