தேசியப் பாடசாலை ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்க நிதி

தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்கவென 170 மில்லியன் ரூபாவை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்நிதி மாகாண கல்வி திணைக்களங்களுக்கு கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் மாகாண பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கும் சம்பள நிலுவையை வழங்குவதற்கு தேவையான பணம் வெகுவிரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு நிதி ஆணைக் குழுவிடம் கல்வி அமைச்சு கேட்டுள்ளது. அந்நிதி கிடைக்கப் பெற்றதும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை மாகாண சபைகள் ஊடாக வழங்கவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *