ஆழ்கடல் படகுகளில் மீன் பிடிக் கச் சென்று மூன்று நாட்களாகக் கட லில் தத்தளித்துக்கொண்டிருந்த 11 இலங்கை மீனவர்களைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இரண்டு ஆழ்கடல் படகுகளிலிரு ந்த மீனவர்களை பருத்தித்துறையிலி ருந்து 160 கடல் மைல் தொலைவில் ஒரு கடற் பகுதியிலும் சங்கமன்கந் தையிலிருந்து 85 கடல் மைல் தொலைவில் ஓர் இடத்திலும் மீட்டதாகக் கடற்படைத் தலைமையகத்தின் ஒருங் கிணைப்பாளர் கமாண்டர் அதுல செனரத் தெரிவித்தார்.
திருகோணமலை துறை முகத்திலிருந்தும், மிரிஸ்ஸ மீன்பிடித் துறை முகத்திலிருந்தும் கடந்த 28ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற 11 மீனவர்களையே கடற்படையினர் காப்பாற்றிள்ளனர்.