2009 சிறுபோக நெல் கொள்வன வுக்கென அரசாங்கம் 2,000 மில் லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் இதன் மூலம் 70, 000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க நாட்டரிசி நெல் ஒரு கிலோவை 28 ரூபாவிற்கும் சம்பா ரக நெல்லை கிலோ 30 ரூபா வாகக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறுபோக அறுவடை இடம்பெற்று வருவதால் அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலனறுவை, அனுராதபுரம் மாவட்டங்கள் உட்பட கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இக்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து வலயங்களாக இப்பிரதேசங்கள் கணிக்கப்பட்டு இவற்றிலி ருந்து 70, 000 மெற்றிக் தொன் நெல் இம்முறை கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதற்கான சகல நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதுடன் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக இக்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இதுவரை 10,000 மெற்றிக் தொன் நெல் மேற்படி சபையினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பொலனறுவையில் 4, 200 மெற்றிக் தொன்னும், அனுராதபுரத்தில் 350 மெற்றிக் தொன்னும் வட மேல் மாகா ணத்தில் 2400 மெற்றிக் தொன்னும் கிழக் கில் 2800 மெற்றிக் தொன்னும் தெற்கில் 1,000 மெற்றிக் தொன்னும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன் சிறுபோக நெல் கொள்வனவு இடம்பெறும் இவ்வேளையில் 2008, 2009 பெரும்போக நெல் கொள்வனவின் மூலம் பெறப்பட்ட நெல்லை சந்தையில் விற்பனைக்கு விட நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிணங்க 15,000 மெற்றிக் தொன் நெல்லை விற்பனை செய்யத் தீர்மானிக் கப்பட்டுள்ளது. பொலனறுவைக்கு 7,000 மெற்றிக் தொன், கிழக்கு மாகாணத்துக்கு, 7,000 மெற்றிக் தொன், வட மேல் மாகாணத்திற்கு 1,000 மெற்றிக் தொன் என, இவ்விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.