பீடைக்கொல்லி பாவனை தொடர் பான ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக் குத்துறை அமைச்சின் பீடைக்கொல்லிகள் பதிவாளர் அலுவலக சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரியான சுமித் ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.
பீடைக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பாவித்தல் என்ற தொனிப் பொருளில் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் சுகாதார கல்வி பணியகம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் கருத்தரங்கின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.