விசாரணைக்கு அழைத்துச் சென்றவரைக் காட்டுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி இடைத்தங்கல் முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பரமசாமி சந்திரமோகன் (31) காணாத நிலையில் எழுந்த வதந்தியையடுத்து, அவரைக் காட்டுமாறு கோரி அந்த முகாமைச் சேர்ந்த மக்கள் புதனன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி வளவின் ஒரு பகுதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டிருந்தனர்.

தகவ அறிந்த வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவரைக் கொண்டு வந்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட நபரைப் பொலிசார் அழைத்து வந்து காட்டினர். அதன்பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. . இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனினும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நிலைமை சுமுகமானதாகத் தெரிவிக்கப்பட்டது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *