விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மெளலி இடம்பெயர் முகாமில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அருள்மெளலி இடம்பெயர் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அருள்மெளலி தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டுவந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலித் தலைமை முதல் சாதாரண போராளி வரையில் இரகிய தகவல் சேகரிப்பு பணிகளை இவர் மேற்கொண்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் குறித்த தகவல்களையும் அருள்மெளலியே திரட்டி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *