தமக்குச் சொந்தமாக இரண்டு தேசிய அடையாள அட்டைகளை தன் வசம் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி ஒருவருக்கு தெல்தெனிய மஜிஸ்திரேட் பிரியன்த லியனகேவினால் நேற்று முன்தினம் (8) 6 மாத ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. திகன- அளுத்வத்தை பிரதேசத்தில் வகிக்கும் வீரய்யா கோபால கிருஷ்ணன் என்பவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்ப ட்டுள்ள தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.
இரண்டு தே.அ. அட்டைகளை தன்வசம் வைத்திருந் துள்ளமை தொடர்பில் தெல் தெனிய பொலிஸ் பொறுப்பதிகாரி சத்ரசிங்க சியம் பலாப்பிட்டியவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் இவர் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.