மாந்தீவு குஷ்டரோக வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து – 13 நோயாளிகள் விமானப்படையினரால் மீட்பு

மட்டக்களப்பு மாந்தீவுப் பகுதியில் அமைந்துள்ள குஷ்டரோக வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தை இலங்கை விமானப்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வைத்தியசாலை மட்டக்களப்பு விமானப்படை முகாமிலிருநிது அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. வைத்தியசாலையில் இருந்த 13 நோயாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை இலங்கை விமானப்படை வீரர்கள் மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுக் காப்பாறினர்.

விமானப் படையின் 212 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி தீ அணைக்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதையடுத்து நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள முழுமையான சேத விபரம் இன்னும் மதிப்பிடப்படவில்லையெனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *