கொல் கட்டாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த அந்த விமானமும், அதன் விமானி மற்றும் ஊழியர்களும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அபு தாபியில் இருந்து சீனாவிற்குப் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக கொல்கட்டா நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் விமான நிலையத்தில் தரையிருங்க அனுமதி கோரியது. விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லையென்று உறுதியளித்தால் தரையிரங்க அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை விமானி ஏற்றுக் கொண்டதையடுத்து, கொல்கட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
தரையிருங்கிய பிறகு விமானத்தில் ஆயுதங்கள் உள்ளதென தலைமை விமானி கூற, சோதனையிடச் சென்ற இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் அதில் ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விமானத்தை ஒடுகளத்திலேயே பிடித்து வைத்தனர். விமானியும், மற்ற ஊழியர்களும் தங்கியிருந்த விடுதியிலேயே பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் தரையிறங்கியதற்காக ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்திய விமான தள ஆணையம், சுங்கத் துறை, குடியேற்றத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அபு தாபியில் இருந்து சீனத்தின் ஹான்யாங் நகருக்கு அந்த விமானம் செல்லவிருந்தது.