வெளிநாடுகளில் தலைதூக்கியிருக்கும் புலி செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய

வெளிநாடுகளில் தலை தூக்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது. சில மேற்குலக நாடுகளுடன் இணைந்து புலி செயற்பாட்டாளர்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக சில மேற்குலக நாடுகள் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையீடு செய்யும் நோக்கில் புலி செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெறும் ஆதரவு ஆரோக்கியமானதல்ல என கட்சியின பொதுச் செயலாளர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
மேற்குலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *