கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளதாக டெங்கு நோய் தடுப்பு மத்திய நிலையம் எமது இணையத்துக்கு இன்று அறிவித்தது. கடந்த சில தினங்களில் டெங்கு நோய் பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும் இப்பொது பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் பெருகி நோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை 3249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் இம்மாவட்டத்தில் 30 பேர் இந்நோய் காரணமாக மரணமாகியுள்ளனர். நாடு முழுவதிலும் இதுவரை 24 ஆயிரத்து 984 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 245 பேர் மரணமடைந்துள்ளனர்.
கேகாலை, கம்பஹ, கொழும்பு, குருநாகல், களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவுவதாக நோய்த் தடுப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.