பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விநியோக நடவடிக்கைகளை பூர்த்திசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1054 புத்தக விநியோக மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
9662 அரசாங்கப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இவ்வாறு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதேவேளை அரச பாடத்திட்டங்களை அமுல் நடத்தும் தனியார் பாடசாலைகளுக்கும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் 30 மில்லியன் பாடப் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்கென அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது.