நவீன தொழில்நுட்பத்துடன் கடற்படை பலப்படுத்தப்படும் – கடற்படைத் தளபதி தெரிவிப்பு

29-sayura00.jpgநவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக கடற்படையை முன்னேற்றவும் கடற்படையை மேலும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று முன்தினம் தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 91 அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறினர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கடற்படை தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

கடற்படை தளபதி மேலும் கூறியதாவது :-வினைத்திறனும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக கடற்படை வீரர்களை மாற்றுவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கடற்படை ஏனைய படைப் பிரிவுகளைவிட மாறுபட்டதாகும். ஏனைய படைப் பிரிவுகள் உள்நாட்டுக்குள்ளேயே இயங்குகின்ற போதும் கடற்படையினர் கடல் எல்லை தாண்டி வெளிநாடுகளிலும் செயற்படுகின்றனர். கடற்படையினர் இலங்கை தூதுவர்களாகவே செயற்படுகின்றனர்.

யுத்த காலத்தில் போலவே தற்பொழுதும் கடற்படையினருக்கு தொடர்ந்து கூடுதலான பயிற்சிகள் வழங்க உள்ளோம். அவர்களுக்கு துறைசார் பயிற்சி வழங்கவும் ஆங்கில அறிவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியல் எட்மிரல் எஸ். எம். பி. வீரசிங்க இராணுவத்தின் 22 ஆவது படைப் பிரிவு கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கண்கவரும் விதத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வாத்திய அணி வகுப்பு, நடனம், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *