கச்சதீவில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்ட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேரை இராமேஸ்வரம் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இராமேஸ்வரத்துக்கு அருகேயுள்ள கச்சதீவில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் விதத்தில் சீனாவின் உதவியுடன் கண்காணிப்புக் கோபுரம் அமைப்பதைத் தடுத்துநிறுத்தவும், இழந்த உரிமையை மீட்கும் பொருட்டும் கச்சதீவில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட இந்து மக்கள் கட்சியினர் தீர்மானித்திருந்தனர்.

அதன்படி இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலர் அண்ணாதுரை தலைமையில், தென் மண்டல பொதுச்செயலர் குமரசேன், மாநில தொழிற்சங்கச் செயலர் திருப்பதி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், விநாயகர் சிலையுடன் நேற்று இராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு வந்தனர். இக் குழுவை இராமேஸ்வரம் டி.எஸ்.பி. கமலாபாய் தலைமையிலான பொலிஸார் தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *