அடுத்துவரும் தினங்களில் இடி மின்னலுடன் மழை; அவதானமாகயிருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

flood1111.jpgகிழக்கு,  ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

அதன் காரணத்தினால் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி பகுதிகளில் பெரும்பாலும் மாலை வேளையிலேயே இடி, மின்னலுடன் மழைபெய்யும்.

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இடி, மின்னல் தாக்கம் காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளையில் திறந்த வெளியில் நடமாடவோ, வயல் வேலைகளில் ஈடுபடவோ வேண்டாம். மோட்டார் பைசிகிள், பைசிகிள் போன்ற வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். தொலைக்காட்சி, வானொலி என்பவற்றைப் பயன்படுத்த வேண்டாம், மின்சார உபகரணங்களின் மின் இணைப்பை துன்டித்து விடவும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *