“பிரபாகரன் திரைப்படம்” – மாவீரர் தினத்திற்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பம்

Pirabakaran_in_Timeதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார். இப்படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.  விடுதலைப் புலிகளின் தற்கொடையாளிகளைப் பற்றி ஏற்கனவே இவர் இயக்கிய ‘சயனைட்’ திரைப்படம் விருதுகளையும் பெற்றுள்ளது.

இயக்குநர் ரமேஷ், ‘’பிரபாகரனைப் பற்றிய படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. ஆனால், பிரபாகரனாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது.

அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகத் திறமையுள்ள நடிகரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமக்கு என ‘இமேஜ்’ ஒன்றைக் கொண்டிருக்கும் நடிகர் எவரும் வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் தான் படப்பிடிப்பை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

நவம்பர் 27 ஆம் நாளை கடந்த இரு பத்தாண்டு காலமாகப் புலிகளின் தலைவரும் தமிழ் மக்களும் மாவீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த நாளில் பிரபாகரன் தனது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் உரையாற்றுவது வழக்கம்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளில் பிரபாகரன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனில் அது, பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக சிறிலங்காப் படையினர் கூறுவதை மேலும் உறுதிப்படுத்திவடும் என உலகு எங்கும் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள். அப்படி அவர் நவம்பர் 27 ஆம் நாள் மக்கள் முன் வரவில்லை என்றால், எனது திரைக்கதையிலும் உச்சக்கட்டக் காட்சியிலும் நான் மாற்றங்களைக் கொண்டுவருவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவரேதான் இந்தத் திரைப் படத்தைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். மலேசியா வாழ் தமிழர்கள் இருவர் படத்துக்கு நிதி வழங்குவார்கள் எனத் தெரிவித்த அவர், நிதி வழங்குனர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.

பிரபாகரனின் மரணம் பற்றி ஏன் சந்தேகம் என்று ரமேஷிடம் கேட்கப்பட்டதற்கு, பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தனது அடையாள அட்டையையும் வைத்திருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவியலை அறிந்தவர்கள் இவை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்று பதிலளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • jimmy
    jimmy

    படம் பிடிப்பு தொடங்க நல்லநாள் அன்று தலைவரும் மாவீரர் உரை நிகழத்துவார் தானே? இந்த மாவீர் உரையின்போது வை கோ வும் நெடுமாறனும் கூடவே இருப்பார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முன்பு மக்களின் பிணங்களைக் காட்டியே காசு பார்த்தனர் புலிகள். இன்று புலிகளின் பிணங்களை வைத்து காசு பார்க்க இன்னொரு கூட்டம்.

    Reply
  • BC
    BC

    //பிரபாகரனின் மரணம் பற்றி ஏன் சந்தேகம் என்று ரமேஷிடம் கேட்கப்பட்டதற்கு பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை.//

    படம் காட்டதான் கழுத்தில் சயனைட்டுடன் போஸ் கெடுத்துள்ளார் தலைவர்.மற்றும் படி ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜயோ ஜயோ இந்த படத்தில் தயவுசெய்து தேச பின்னோட்ட நபராக பல்லியை தெரிவு செய்யவும்; அதுக்கு உரிய சன்மானத்தை தேசத்திடம் பெற்று கொள்ளவும்; அப்போது மிகபெரிய யதார்த்த வில்லனாக பல்லி நடித்து அல்ல எழுதி தருவேன் என மகிந்தா மீது சத்தியம்;

    Reply
  • மாயா
    மாயா

    இச் செய்தி , இந்திய திரைப்படங்களை புலிகள் நேரடியாக அல்லது பினாமி பெயர்களில் தயாரித்து வந்தனர் என்பதை உறுதி செய்துள்ளது.
    //மலேசியா வாழ் தமிழர்கள் இருவர் படத்துக்கு நிதி வழங்குவார்கள் எனத் தெரிவித்த அவர், நிதி வழங்குனர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.//

    பிரபாகரன் எனும் பெயரில் ஏற்கனவே சிங்களத்தில் ஒரு திரைப்படம் சர்ச்சைகளோடு வந்து விட்டது.
    http://get2pc.com/watch?v=flT_MW8u6NI

    எதிர்வரும் மாவீரர் தினத்தில் பேசவிருக்கும் பிரபாகரன் , தன்னைப் போல் இன்னொருவர் நடிப்பதை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, இத் திரைப்படத்தில் வரும் பிரபாகரனை வைத்து பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என மக்களை நம்ப வைத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    திருமாதான் பொட்டரின் பாத்திரத்தில் நடக்க இருப்பதாக நடேசராகவும் தமிழ்செல்வனாகவும் (இரு வேடத்தில்) நடிக்க இருக்கும் வைகோ சொல்லியதாக புலிதேவன் வேடம் ஏற்றிருக்கும் ஜயா நெடுமாறன் சொல்லியுள்ளாராம்;

    Reply