இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 10 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை 45 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
கடநத 36 மணி நேரத்தில் கர்நாடகத்தில் நால்வர், டில்லியில், குஜராத்தில் தலா இருவர், சென்னையில் இருவர், புனேவில் ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரில் அநேகமானோர் கர்நாடகத்தில்தான் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். இதில் புனேவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் ஐந்து பேரும், தமிழகம், டில்லியில் தலா இருவரும், கேரளத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். மொத்தம் 45 பேர் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டும் 159 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,401 ஆக உயர்ந்துள்ளது.