யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள குறை பாடுகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
யாழ். வைத்தியசாலையை தான் நேரடியாகப் பார்வையிட்ட போது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்ததாகவும் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சுகாதார அமைச்சரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளையும் வர்ணம்தீட்டி அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்