அப்பலோ மருத்துவமனை பணிப்பாளர்களில் ஒருவராக கோத்தபாய நியமனம்

gothabaya.jpgஇலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு அப்பலோ மருத்துவமனையின் பணிப்பாளர்களில் ஒருவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பலோ மருத்துவமனையின் உரிமையாளர்களான லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன் நிறுவனத்தினர், இந்த நியமனம் குறித்து கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் அதிகளவான பங்குகளைக் கொண்டுள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சார்பிலேயே கோத்தபாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தியமை தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், கூட்டுத்தாபனத்தை கடந்த ஜூன் மாதம் பிரபல வர்த்தகரான ஹெரி ஜெயவர்தனவிடம் இருந்து பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

இந்திய அப்பலோ நிறுவனம் நிர்மாணித்த அப்பலோ மருத்துவமனையின் அதிகளவான பங்குகளை கடந்த 2006 ஆம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை நிர்வகித்து வந்த ஹெரி ஜயவர்தன கொள்வனவு செய்திருந்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *