மடுத் திருப்பதியின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் நேற்று தெரிவித்தது.
இதன் பிரகாரம் மாத்தறை, புறக்கோட்டை, மொறட்டுவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மதவாச்சி வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெற உள்ளதோடு மதவாச்சியில் இருந்து மடு வரை விசேட இ. போ. ச. பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.
இதேவேளை மதவாச்சியில் இருந்து புறக்கோட்டை, நீர்கொழும்பு, மாத்தறை ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் நீர் கொழும்பில் இருந்து காலை 7.45 மணிக்கு விசேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளதோடு இந்த ரயில் பகல் 1.43 மணிக்கு மதவாச்சியை சென்றடையும்.
* ஆகஸ்ட் 13 மொறட்டுவையில் இருந்து காலை 7.50 மணி – பி.ப. 1.43 மணிக்கு மதவாச்சி.
* ஆகஸ்ட் 15 மதவாச்சியில் இருந்து பி.ப. 3.15 மணி மொறட்டுவைக்கு இரவு 9.00 மணி
ஆகஸ்ட் 15 மதவாச்சியில் இருந்து பி.ப. 4.45 மணி – இரவு 10.50 மணிக்கு நீர்கொழும்பு
* ஆகஸ்ட் 16 மதவாச்சியில் இருந்து பி.ப. 4.45 மணி இரவு 10.53 மணிக்கு நீர்கொழும்பு
பின்வரும் ரயில் சேவைகள் தினமும் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு இவற்றுக்கு மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
* மாத்தறை – வவுனியா மாத்தறையிலிருந்து காலை 9.30 மணி – மதவாச்சிக்கு இரவு 7.43 மணி.
* புறக்கோட்டை – தாண்டிக்குளம் புறக்கோட்டையில் இருந்து காலை 5.45 மணி – மதவாச்சிக்கு காலை 10.00 மணிக்கு
* புறக்கோட்டை – மதவாச்சி புறக்கோட்டையில் இருந்து காலை 6.05 மதவாச்சிக்கு நண்பகல் 12.11 மணி
* வவுனியா – மாத்தறை மதவாச்சியில் இருந்து காலை 3.52 மாத்தறைக்கு பகல் 2.26 மணி
* வவுனியா – புறக்கோட்டை மதவாச்சியில் இருந்து பி.ப. 4.15 புறக்கோட்டைக்கு இரவு 8.30 மணி
* மதவாச்சி – புறக்கோட்டை மதவாச்சியில் இருந்து பகல் 12.25 மணி புறக்கோட்டைக்கு இரவு 7.00 மணி.
இது தவிர தினமும் புறக்கோட்டையில் இருந்து வவுனியா வரை இரவு 10 மணிக்கு இரவு நேர தபால் ரயில் சேவை இடம்பெறும். இந்த ரயில் மறுநாள் காலை 4.29 மணிக்கு மதவாச்சியை வந்தடையும். இந்த ரயில் மதவாச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு பயண மாகி மறுநாள் காலை 4.35 மணிக்கு புறக்கோட்டையை வந்தடையும்.