அந்த மானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லையென இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீண் பதற்றம் இன்றி அமைதியாக இருக்குமாறும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
ஜப்பானிலும் ‘சுகுரு’ என்ற தீவுக்கு அருகே நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 ஆக பதிவாகி இருந்தது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொருட்கள் கீழே விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.