இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் ஆறு பேர் பலி

ah1n1.jpg
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்திருப்பதாக இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை நகரில், திங்கட்கிழமை நான்கு வயது சிறுவன் ஒருவர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளார்.  தென் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள முதல் மரணம் இது. குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்றக் கூடும் எனும் அச்சத்தில் நாடெங்கிலும் உள்ள பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மரணம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் எண்ணூற்றுக்கும் அதிகமானோர் எச் 1 என் 1 கிருமியினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகளும், சோதனை செய்ய போதுமான வசதிகளும் கையிருப்பில் உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறையின் செயலர் வி கே சுப்புராஜ் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *