திவுல பிட்டிய, கோப்புவத்த பகுதியிலமைந்துள்ள கல்குவாரியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மற்றுமொருவர் கம்பஹா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
நேற்றுக் காலை சுமார் 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மேற்படி கல்குவாரியில் கல் உடைப்பதற்காக வைத்த பொறி வெடி வெடித்துச் சிதறிய போது பாரிய கற்களும் வெடித்துச் சிதறி அங்கு கடமையிலீடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்த போதே இவர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.