அமெரிக் காவிடமிருந்து 1.6 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயும் 2009 யூலை மாதம் 10 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினைத் தொடர்ந்து இந்த வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளது.
வடபகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைக்கு 26 கொள்கலன்களில் இந்த வைத்திய உபகரணங்கள் மிகவிரைவில் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.