லங்காபுத்ர அபி. வங்கியின் கிளை மட்டக்களப்பில் திறப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ இவ்வங்கியினை திறந்து வைத்தார்.

இவ்வங்கியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்வங்கித் திறப்பு விழாவில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வங்கியின் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கை யினை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு உதயத்தின் மூலம் மட்டக்களப்பு மாவ ட்டத்தில் திறக்கப்பட்ட முதலாவது லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் கிளை இதுவென்பது குறிப்பிட த்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *