மஹஇலுப்பள்ளமவில் விவசாய கண்காட்சி

பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாண விவசாய கால்நடை வளர்ப்பு அமைச்சும் மாகாண விவ சாயத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ரஜரட்ட விவசாயக் கண்காட்சி நேற்று (20) ஆம் திகதி மஹ இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு மாகாண விவசாய அமைச்சர் கே. எச். நந்தசேன தலைமையில் நடைபெற்றதுடன். கெளரவ அதி திகளாக கலந்துகொண்ட விவசாய அபிவிருத்தி கமநல சேவை அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வுகளில் மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமலால் திஸாநாயக்க மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே மாகாண சபை உறுப்பினர் கமகே வீரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.கண்காட்சி 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை நடைபெறும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *