மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் முஸ்லிம் பிரிவு அமைக்க நடவடிக்கை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் அப்பகுதி முஸ்லிம் பாடசாலைகளின் தேவை கருதி முஸ்லிம் பிரிவொன்றை ஆரம்பிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முன்பு இயங்கி வந்த முஸ்லிம் பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையின் பேரில் முதலமைச்சர் இப்பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று அண்மையில் மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் முஸ்லிம் கல்விப் பிரிவு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மாகாண கல்விப் பணிமனையில் இயங்க ஆரம்பிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    மாளிகையை கைவிட்டு விட்டு குடிசைக்கு கையேந்தும் கதை

    Reply