லிபிய நாட்டுக்குத் தொழில் வாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்பும் பணி அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக 30-35 ஆயிரம்பேர் லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய் ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார்.
மருத்துவம், சுற்றுலாத்துறை, நிர்மாணம், கைத்தொழில் துறைகளில் இலங்கைக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்க உடன்பாடு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாரென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான உடன்படி க்கையின் அமுலாக்கம் குறித்து ஆராயவென அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேனவை லிபியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.