புலி களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கந்தளாய் சேருவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் இளைஞர்கள் என்று தெரிவித்த அவர் கையடக்கத் தொலைபேசி, கணனி உட்பட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தங்களது கையடக்கத் தொலைபேசியில் புலிகளின் கீதங்களை பதிவு செய்துள்ளதுடன் புலிகள் தொடர்பான ஆவணங்களை கணனியில் வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.