இணையதளத்தை தடுத்ததாக இலங்கை அரசாங்கத்தின் மீது கண்டனம்

இலங்கை அரசாங்கத்தை அடிக்கடி விமர்சனம் செய்யும் லங்கா நியூஸ் வெப் என்னும் இணையதளத்தை இலங்கையில் உள்ளவர்கள் அணுகுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கண்டித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மகனான நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறித்து தாம் வெளியிட்ட ஒரு செய்திதான், தமது இணையதளம் தடுக்கப்படுவதற்கான உடனடிக் காரணம் என்று தாம் நம்புவதாக அதன் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதி மோதலால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நாமல் ராஜபக்ஷ சென்றபோது அங்கிருந்தவர்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த இணையதளத்தை தடுத்ததற்கான காரணம் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *