வவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளை சின்னமுத்து நோயிலிரு ந்து பாதுகாக்கவென அரசாங்கம் விசேட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தியுள்ளது.
இதேநேரம் இங்கு சமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், நெருப்புக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் உறவினர்களுக்கும் நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்தூசி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இந்நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி இருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளையும், சிறுவர்களையும் சின்னமுத்து நோயிலிருந்து பாதுகாக்கவென விசேட திட்டமொன்றை சுகா தாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சு நடைமுறைப்படுத்தி இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபன மருத்துவ நிபுணர் டாக்டர் நவரட்னசிங்கம் ஜனகன் கூறி னார்.
இத்திட்டத்தின் கீழ் நடைமுறையிலுள்ள சின்னமுத்து தடுப்பு மருந்து வழங்கல் அட் டவணைக்கு மேலதிகமாக இக்கிராமங் களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் ஆறு மாதம் முதல் மூன்று வய துக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தடுப்பு மருந்து வழங்குப்படுகின்றது. இது சின்ன முத்து நோயைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலான முன்னோடி பாதுகாப்பு நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.
சின்னமுத்து நோய்க்கு பிறந்து ஒன்பது மாதம் முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே தடுப்பு மருந்து வழங்கப்படுவது வழமை என்று குறிப்பிட்ட அவர், இக்குழந்தைகளுக்கு வழமையான அட்டவ ணைக்கு மேலதிகமாகவே பிறந்து ஆறு மாதம் முதல் வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் வழமையான அட்டவணைப்படி உரிய காலத்தில் அத்தடுப்பு மருந்தை பெறுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.