சார்க் நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்களின் மா நாட்டின் போது கொழும்புப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எம். சுமனதாச தெரிவித்தார். சார்க் அமைப்பு நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் உத்தியோக பூர்வமாக அரம்பமானது.
இன்றைய அமர்வுக்கு தலைமை வகித்த சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இன்றைய அமர்வின் ஆரம்பத்தின் போது சார்க் வலய நாடுகளில் சிறுவர்களின் நலன் காக்கவும் மேம்பாட்டுக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய ஆலோசகர் கெப்ரியல் கோஹ்லரால் வாசிக்கப்பட்டது.
அமைச்சின் செயலாளர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில். சார்க் வலய நாடுகளில் சிறுவர்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து கண்காணிக்கவும் அது தொடர்பான அறிக்கை சமர்பிப்பதற்கான பொறுப்பையும் சார்க் நாடுகள் யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்று சமர்பிக்கப்பட்டது. வலய நாடுகள் சிறுவர்களுக்கான பல அபிவிருத்தித் திடடங்களை மேற்கொண்டு வருவது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த கால எல்லையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களே யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு வருகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், அப்கானிஸ்தான், பங்ளாதேஷ், மாலை தீவு. நேபாளம் ஆகிய நாடுகளின் அமைச்சுக்களின் செயலாளர்கள்ää பணிப்பாளர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகளாக இன்றைய அமர்வில் கலந்து கொண்டனர்.