யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று முதல்முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார் யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மென்டகு சமரசிங்க இராணுவத்தளபதியை வரவேற்றார். பின்னர் அங்கு இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை பொன்சேகா ஏற்றுக்கொண்டார்.
குடாநாட்டில் பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராய்ந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் மனிதாபிமான செயற்பாடுகள் கண்ணிவெடி அகற்றல் பயிற்சிகள் ஆகியவற்றில் படையினரின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கமளித்தார எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது