வடக்கே வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மீள்குடியேற்ற பகுதிகளுக்கு உயர்அதிகாரிகள் புதன்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் குழு கனகராயன்குளத்திற்கும், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் குழு பாலமோட்டை நவ்வி போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தனர்.
அரச அதிகாரிகள் சென்று தமது கடமைகளை செய்யக்கூடிய சாதகமான நிலை உள்ளதா என்பதை அறியவே இவர்களுடைய விஜயம் அமைந்திருந்தது. புதைந்துள்ள வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வெடிபொருட்கள் இல்லை என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டவேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்ற இந்திய கண்ணி வெடி அகற்றும் நிபுணர் குழுவினர் இங்கு வரவுள்ளனர்.இதற்கிடையே விடுவிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தில் பல கிராமங்களில் அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.