கஹவத்தை கொட்டதென்னைப் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. எனினும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற வில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதால் சில இடங்களில் மண்சரி அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் ஜி.பி குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலையால் இரவு வேளைகளில் வாகனம் செலுத்தும் போது அவதானமாயிருமாறும் அவர் கேட்டுள்ளார். தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளதால் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.