செட்டி குளம் நிவாரண கிராமங்க ளில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களை பராமரிக்கும் நிலைய மொன்று இன்று சனிக்கிழமை வவுனியா வைரவபுளியங்குளத்தில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் பாரியார், முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். ஆதரவற்ற சுமார் 300 சிறுவர், சிறுமியர்கள் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளனர்.