இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் சகல வசதிகளையும் கொண்ட தபால் நிலையங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பி.திஸநாயக்க தெரிவித்தார். இவ்வாறு எட்டுத் தபாலகங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றை அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தியடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான தபால் விநியோக நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தபால்களை விநியோகிப்பதற்கு விஷேட திட்டமொன்றைத் தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும் அந்தப் பகுதிகளுக்கான தபால் விநியோக வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.