இலங் கைத் தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் மீண்டும் குடியமர்த்துவது, சமவுரிமை அளிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ராஜபக்ஸ நிறைவேற்ற தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார். ”ராஜபக்ஸ தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவார் என்று இப்போது வரை நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையில் தமிழர்கள் சமவுரிமை பெறுவது தான் எங்களது நோக்கம்” என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
palli.
நிங்கள் வலியுறுத்துங்கோ அல்லது வக்காளத்து வாங்குங்கோ; ஆனால் தாங்கள்(இந்தியா) கொடுத்த உறுதிமொழியோ அயல்நாட்டு மொழியோ என்னாச்சு? அதை முதலின் செயல்படுத்த ஏசுங்க. அதன் பின் சிங்கள அரசுடன் பேசுங்க அல்லது மோதுங்க;
சாந்தன்
உங்கட அட்வைசர் சிவசங்கர் மேனன் சொல்லுறார் “… சிறிலங்காவுக்கு எது சிறந்தது என்பதைச் சொல்வது இந்தியாவின் வேலையோ, நோர்வேயின் வேலையோ அல்ல..” என. நீங்கள் வேற கதை சொல்லுறியள்!
msri
சிதம்பரம் “பின்நவவீனத்துவப் பாணியில்” பெருங்கதையாடல் செய்கின்றார்!
Sooriasegaram, Mylvaganam
இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்