காஷ்மீரில் துணைப்படையினருக்கு பதிலாக பொலிஸாரை மாற்றீடு செய்யுமாறு அமைச்சர் சிதம்பரம் உத்தரவு

காஷ்மீரில் இரு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்டதற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அங்கு பாதுகாப்பு மறு பரிசீலனை ஒன்றைச் செய்வதற்காக இந்திய உட்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படை உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்களை அடுத்து, காஷ்மீரில் உள்ள துணைப்படையினர் படிப்படியாக பொலிஸாரினால், மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த கொலைகளுக்கு துணைப்படையினரே பொறுப்பு என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். படையினர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்கள். ஆனால், அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தடயவியல் சோதனைகள் கூறுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *