வடக்கின் ‘வசந்தம் தொலைக்காட்சி’ மற் றும் ‘வசந்தம் வானொலி’ சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமை ச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (10) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கில் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுயாதீன தொலைக்காட்சி சேவையின் கீழ் உள்ள வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலி என்பன வடக்கு பகுதிமக்களுக்காக அங்கு ஆரம்பிக்க உள்ளோம்.
இதற்காக 150 மீட்டர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரமொன்று கொக்காவில் பகுதியில் அமைக்கப்படும். இதற்காக ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.