மட்டக் களப்பு மாவட்டத்தில் 25 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு நாளை வியாழக்கிழமை அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 8.00 மணி முதல் 5 மணி வரை சத்துருக்கொண்டான், மைலம்பாவெளி, ஏறாவூர் நகரம், மீராங்கேணி, சதாம்ஹுசைன் கிராமம், மிச்நகர், செங்கலடி, கொடுவாமடு, இலுப்படிச் சேனை, கரடியனாறு, ஆயித்திய மலை, உன்னிச்சை, கித்துள், மரப்பாலம், உறுகாமம், கொம்மாதுறை, கழுவங்கேணி, மாவடிவேம்பு, சித் தாண்டி, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கிண்ணையடி ஆகிய 25 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.