அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளது.
வடக்கில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதி எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுள் ஒன்றாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற இவ்வேளையில், கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக வடக்கில் இருந்து புலம் பெயர்ந்து வாழுகின்ற முஸ்லிம்கள், தமது தாயக மண்ணில் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.
சமூக வியாபாரிகளும் அந்நிய சக்திகளின் தரகர்களும் இம்மக்களின் வாக்குகளில் சவாரி செய்ய எத்தனிக்கின்ற இவ் வேளையில் இம்மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய பொறுப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கின்றது. எனவே இத்தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போட்டி யிட்டு தமது மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்.