தயா மாஸ்டர் 5 மணி நேரம் வாக்குமூலம்

dayamaster000.gif
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்பு ஆராச்சி முன்னிலையில் சுமார் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் தொடர்ச்சியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் தயா மாஸ்டர் தானாக முன்வந்து வாக்குமூலமளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்தே நேற்று அவர் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டு பிற்பகல் 1.10 மணியளவில் ஆரம்பித்து மாலை 5.50 மணிவரை அவர் வாக்குமூலமளித்துள்ளார்.  பிரதம நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்தே தயா மாஸ்டரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்பாளர், தட்டெழுத்தாளர் தவிர சி.ஐ.டி.அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றி விட்டே நீதிவான் தயா மாஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *