அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைச் சந்தித்து உரையாடினர். இச்சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் அமெரிக்கா உதவத்தயார் என ஜனாதிபதியிடம் தூதுக் குழுவினர் இச்சந்திப்பின்போது உறுதியளித்தனர்.
வடபகுதி நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த இத்தூதுக் குழுவினர் இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளை நேரில் கண்டறிந்தனர். சர்வதேச ஊடகங்கள் கூறியவாறு பாரிய குறைபாடுகள் இந்த நிவாரணக் கிராமங்களில் காணப்படவில்லை என்றும் தூதுக் குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.