தவறுதலான வேட்டு; அதிரடிப் படை வீரர் பலி

அம்பாறை, சியம்பலாண்டுவ பகுதியில் பதுங்கியிருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படைவீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக வேட்டு தீர்க்கப்ப ட்டதனால் அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றொரு வீரர் உயிரிழந்துள்ளார்.

சிம்பலாண்டுவ, மூன்றாம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அறுகம்பை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த கே. ஜி. துஷாரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *