டெங்கு நோயை பரப்பக் கூடிய சுற்றுச் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அபராதம் அறவிடவும், தண்டனை விதிக்கவுமுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை தண்டமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயினால் கூடுதலானோர் பாதிக்கப்பட்டனர். கடந்த வருடம் 27 பேர் டெங்கினால் இறந்ததோடு கடந்த 5 மாதத்தில் மாத்திரம் 70 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து டெங்கு நோய் தொடர்பாக சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் மக்களை தெளிவுபடுத்தி வருவதோடு பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. டெங்கு நுளம்புகளை பெருக்கக் கூடிய இடங்களை வைத்திருக்கும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றுக்கு எதிராகவும் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்.