செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்களுடைய தேவைகள் குறித்த உயர்மட்ட மாநாடு இன்று திங்கட்கிழமை காலை வவுனியா செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட சகல திணைக்களங்களின் முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு படையினர் இந்த மகாநாட்டில் கலந்து கொள்வர்.
காலை 11 மணிக்கு மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் குறைபாடுகள், இன்னும் பல விடயங்கள் இந்த மகாநாட்டில் ஆராயப்படுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.